வியாழன், 30 ஜனவரி, 2014

வாலை முறுவஞ்சி


கேட்டதைக் கொடுக்கும் காமாட்சியே
புவனதிற்கு பொருளளக்கும் புவனேஸ்வரியே

மன மாசகற்றும் மீனாட்சியே
அடியவருக்கு அருளும்  அபிராமியே

பட்டருக்காக காதணியை பௌர்ணமியாக்கிய தாயே
இப்பக்தரின் வாழ்வில் ஒளி எற்றுவாயே

பெரும் பொருளாகிய உன் அருளையும்
உன் அருளால் சிறுபொருளும் அருள்வாயே
வினையறுத்து விதியை வளைத்து
வழி நடத்தும் வாலையே ...
 



1 கருத்து: