ஞாயிறு, 15 நவம்பர், 2015

வெள்ளம், நமது கள்ளம்

ஆற்றின் அளவை சுருக்கி
குளத்தின் வயிறை நிரப்பி
நீரின் இடத்தைத்  திருடி
விண்ணைமுட்டும் வீடாய் மாற்றினோம்

இருந்த இடத்தைக் காணாது
தேடி அலையும் நீரை
குறை சொல்லிப் பயனில்லை
கூக்குரல் எழுப்பும் மனிதா !