காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 அக்டோபர், 2014

வெங்காயக் காதல் !

முதல் வகுப்பில்
முதல் மதிப்பெண் எடுத்த
குழந்தை மீது காதல் !

ஐந்தாம் வகுப்பில்
பைவ் ஸ்டார் பிடுங்கிய
பெதும்பை மீது காதல் !

பத்தாவது, பணிரெண்டாவதில்
பரீட்சைக்கு பிட் கொடுத்த
வஞ்சிகள் மீது காதல் !

கல்லூரியில் கண்ட
எல்லா  கன்னிகள் மீதும் காதல் !

படிக்கிற வயதில் 
பாடம் தான் காதல் 
என பெரியவர்கள் சொன்னார்கள்,
படித்தேன், வேலை கிடைத்தது !

வேலை செய்யுமிடத்தில் 
வெங்காயம் !!!!
எல்லா வெங்காயமும் விலை போய்விட்டன !
கண்ணீர் மல்க இயற்றினேன் 
இக் கவிதையை 
வெங்காயம் வெட்டிக்கொண்டு தனியாக !




ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கண்டாங்கி, கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு !

சிகப்பு சேலை அணிந்த சீமாட்டி 
என் மனதை கொள்ளை கொண்டாளே  
அவள் புன்சிரிப்பை காட்டி 

தூரத்தில் நின்றாளே ஆற்றின் வளைவு காட்டி 
என் கால்கள் அவள் நின்ற திசை
நோக்கி நகர்ந்ததே போக்கு காட்டி   

சென்றாள் அன்ன நடை காட்டி  
என் கண் அவளைப் பின் 
தொடர்ந்ததே என்னிடம் டூ காட்டி 

என்னை அவள் பார்த்த கணம் 
தென்றல் வீசியதே என்னை நோக்கி  
அவள் பார்த்த பின் நான் 
என்னை விட்டு ஓடினேனே விலகி விலகி 

பூவைச் சுற்றிய சேலையின் நடுவே 
தெரிந்ததே ஒரு வெள்ளிக் கீற்று
என் கைகள் அதனை பக்கத்
துணையாக்க பறந்ததே வெள்ளிடை நிரப்ப   ...









திங்கள், 6 ஜனவரி, 2014

காற்று வாங்க போனேன் .. ஒரு ...

காலைக் காதலன் கிழக்குக் 
கதிரவனின் கண்ணொளி பட்டு 
மாலைக் காதலன் முழு 
நிலவில் மோகம் கொண்ட 
வாடைக் காதலி வஞ்சிப் 
புவி மார்கழிப் பனியில் 
முகம் துடைத்தெழும் அழகிற்கு 
ஈடு இணை உண்டோ