இன்றே சேமிக்கிறோம்
நாளைய வீட்டிற்கு
இன்றே வருந்துகிறோம்
நாளைய வாழ்வுக்கு
இன்றே கணக்கிடுகிறோம்
நாளைய வரவிற்கு
இன்றே முடிவெடுக்கிறோம்
நாளைய பிரச்சனைக்கு
கண்ணிமைக்கும் நேரத்தில்
காட்சிகள் மாறும்
என்பதை மறந்து ...
கேட்ட, கற்ற , கண்ட மற்றும் எண்ணங்களின் தாக்கத்தில் எழும் கவிதை, கட்டுரைகள் ! சடாரென திசை மாறிய, வாழ்வின் நெடிய பாதையினில், வியந்து லயித்த எளியோன் ! தமிழ் எனது அடையாளம் !