வேலவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 டிசம்பர், 2013

முத்தமிழ் சுடர் !

சுடராய் உதித்தவன், முத்தமிழின் முதல்வனவன்
நீல வானில் நீக்கமற நிறைத்தவன்
நெய்தலில் வினையறுத்து, குறிஞ்சியில் அமர்ந்தவன்
காற்றின் வேகத்தில் கஷ்டங்களைக் களைபவன்
வற்றாமல் அருளும் சுனையவன், துணையவன் .






சனி, 23 நவம்பர், 2013

குழந்தை வேலன் !


கொஞ்சத் தூண்டும் குழந்தை வேலா  

மனதைத் திருடும் கள்வனே கந்தா
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரா
கருணையின் வடிவே அழகனே கதிரேசா ..


மனதைத் திருடும் கள்வன் உனை
கையில் ஏந்திக் கொஞ்சவும் தோனுதே
கணநேரமும் அகலாதே, கருத்தினில் மறையாதே 
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரனே ..



வெள்ளி, 8 நவம்பர், 2013

வேலவா

நிறையை  நிறைத்து 
குறையைக் குறைத்து
அறிவை புகற்றி 
இருளை அகற்றி
 பொருளை அளித்து 
வறுமையை ஒழித்து 
அகத்தில் நல்ல 
பிரணவத்தை நிறுத்தி
பேரின்பத்தை ஊட்டி 
மாயையை ஓட்டி 
வாழ்வை வளமாக்கி 
வாழ்வளித்தவனே  வேலவா !