புதன், 29 அக்டோபர், 2014

சமர்ப்பணம்

வேலின் வேந்தனே, வள்ளி மணாளனே
மயில் வாகனனே, மனதைக் கவர்ந்தவனே
சேவற் கொடியோனே, சிந்தையில் நிறைந்தவனே
எப்பொழுதும் தவறாமல், எப்பொழுதும் வருவாய்
எப்பொழுதும் குறையாமல் , எப்பொழுதும்அருள்வாய்
சமரனே உன்னிடம், சமர்பிக்கின்றேன் என்னை !




செவ்வாய், 21 அக்டோபர், 2014

வெங்காயக் காதல் !

முதல் வகுப்பில்
முதல் மதிப்பெண் எடுத்த
குழந்தை மீது காதல் !

ஐந்தாம் வகுப்பில்
பைவ் ஸ்டார் பிடுங்கிய
பெதும்பை மீது காதல் !

பத்தாவது, பணிரெண்டாவதில்
பரீட்சைக்கு பிட் கொடுத்த
வஞ்சிகள் மீது காதல் !

கல்லூரியில் கண்ட
எல்லா  கன்னிகள் மீதும் காதல் !

படிக்கிற வயதில் 
பாடம் தான் காதல் 
என பெரியவர்கள் சொன்னார்கள்,
படித்தேன், வேலை கிடைத்தது !

வேலை செய்யுமிடத்தில் 
வெங்காயம் !!!!
எல்லா வெங்காயமும் விலை போய்விட்டன !
கண்ணீர் மல்க இயற்றினேன் 
இக் கவிதையை 
வெங்காயம் வெட்டிக்கொண்டு தனியாக !




புதன், 1 அக்டோபர், 2014

கிக்

டூ பீஸ்ஸில் சுற்றும் 
மேலைநாட்டு ஒயினை விட
தெருவோரத் தலை நிமிரா
தமிழ்நாட்டு கள்ளுக்கு கிக்கதிகம்