வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் சதுர்த்தி

வேழ முகத்தோனே
              வினைகள் தீர்பவனே
வேதங்களின் முதல்வனே
               ஞானத்தின் தலைவனே
சித்தி புத்தியின்
               சீர்மிகு நாயகனே
வேண்டிய நல்லதை
                   வேண்டிய தருணத்தில்
வாரி வழங்கும்
                  பாரி வள்ளலே
சிரம் தாழ்த்தி
                 பணிந்தோம் அய்யா
சிறப்பான வாழ்வை
               சீவனுக்கு அளித்தமைக்கு !






             





ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

நில நடுக்கம் !

நிலம் அதிர்ந்ததை
உணர்ந்தேன்
நில நடுக்கமென்பதை
உணரவில்லை
என்னை கெடுத்துவிட்டது
தமிழ் சினிமா
பாத்திரம் உருள்வது தான்
நில நடுக்கமென்று


செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

நாயகி

பெண்ணே
பல நேரங்களில்
என்னைப் பார்க்காமல்
களவாடிச் செல்கிறாய்
சில நேரங்களில்
என்னைப் பார்த்து
புத்துயிர் அளிக்கிறாய்
உண்மை சொல் 'நாயகி'யே
நீ நல்லவளா ! கெட்டவளா !