வெள்ளி, 13 ஜூன், 2014

மதுரை மீனாட்சி

பச்சைப் பட்டுடுத்தி
பைங்கிளியை  பாகம் வைத்து
நினை தொழுவோரின்
நினைவெல்லாம் நிவர்த்தி செய்து
தலை வணங்குவோரின்
தலைவிதியை மாற்றித் தொடுத்து
சங்கத்தமிழ் மதுரையை
சுந்தரமாய் ஆட்சி செய்யும்
மீனாட்சி தாயே
உனை மனதார போற்றுகின்றோம்



செவ்வாய், 10 ஜூன், 2014

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்?

தோகை மயில் தேகம் சுமக்க 
வேலும் தண்டமும் கரங்களில் தவழ 
துணைவியர் இருவரும் புஜங்களைக் கவர 
இடும்பனும் சேனையும் உன்னடி தொடர 
தினமென்னைக் காத்து திருவருள் புரியும் 
குழகனே, ஐம்முகனின் குமரனே, சரணடைந்தேன் 
உன் தாள் பெரும் உவப்புடனே 



திங்கள், 2 ஜூன், 2014

தேர்வறை தேவதைகள்

தெளிவாய்த் தெரிகிறார்கள்
தேவதைகளில் சிலர்  
தெரியாமல் முழிக்கும் 
தேர்வறையில் இளைப்பாற