செவ்வாய், 6 டிசம்பர், 2016

அஞ்சலி

சந்தியாவின் மகளே
சரித்திரத்தின் துகளே

துணிவின் இலக்கணமே
தேயா தனித்துவமே

தூர நின்றவர்களை
உன் தோரணை கண்டு
வியக்க வைத்தாய்

எதிர்த்து நின்றவர்களை
உன் ஆளுமை கண்டு
அயர வைத்தாய்

பக்கத்தில் நின்றவர்களை
உன் பெருமை கண்டு
ஏங்க வைத்தாய்

மீண்டு வருவாய் என
நினைத்த தொண்டனை
மீளாத் துயரில் மூழ்கடித்தாய்

இரு விரல் காட்டி
எதிர்த்தவரை ஓட்டி
வரலாற்றின் ஏடுகளை
புரட்சியால் புரட்டிய தலைவியே !
நீ என்றும் புரட்சித் தலைவியே !