வியாழன், 31 அக்டோபர், 2013

இயற்கை

வான விளக்கோளியில்
காற்றுக் கவிதைக்கு
கடல் நீர்
இசை மீட்ட
வண்ணப் பறவை
ஆடியது வகையாய் ! 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நாணம்

தலைவனைக் கண்டு 
நாணி முகம் 
சிவப்பாளாம் தலைவி 
உன்  முகம் 
சிவக்கக் செய்த   
கள்வனெவனோ  வானே ?

Inline image 1

புதன், 23 அக்டோபர், 2013

கிக்

பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பாலும்
வளர்ந்த  குழந்தைக்கு
வோட்காவும்  !

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அதிசயம்



அதிசயங்களைத் தேடி 
அலைகிறோம் வாழ்க்கையில் ..
இப்பூமியில் உயிர் 
வாழ்தலே ஓர் 
அதிசயமென உணராமல் !   



புரட்டாசி 21, 2013

வியாழன், 10 அக்டோபர், 2013

துளிர் மனமே !

புயலைக் கண்டு
மரம் பதுங்குவதில்லை
தடுத்துத் தலைநிமிர்கிறது ....
இடியைக் கண்டு
பூமி நடுங்குவதில்லை
தாங்கித் தழைக்கிறது .....
அங்ஙனமே தடையைக்
கண்டு தளர்ந்து
விடாதே மனமே
தாண்டித் துளிர் !



வெள்ளி, 4 அக்டோபர், 2013

நாடகம்

நிலையில்லா வாழ்க்கை தனை
நிரந்திரம் என எண்ணி
நித்தம் களித்து இன்புறுகிறோம்
இறைவன் நடத்தும் நாடகத்தில்
நாடகத்திற்கும் முடிவு உண்டல்லோ !