சனி, 25 ஜனவரி, 2014

குடியரசு

பாரதம் ...

பரதமும் ஓடிசியும்
கலந்தாடும் களமிது
காந்தியும் சுபாஷும்
குடியிருந்த கோட்டையிது

சிவனையும் புத்தனையும்
சேர்த்த சிற்பமிது
அல்லாவையும் ஏசுவையும்
பிணைத்த கதையிது

கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாளமிது
அரிசியும் கோதுமையும்
செழிக்கும் காணியிது

தமிழும் சம்ஸ்கிருதமும்
தோய்த்த  ஓலையிது
குமரியும் இமயமும்
பாதுகாக்கும் கணமிது

வேற்றுமையில் ஒற்றுமை
என்றனர், வேற்றுமையே
இல்லையே பிறகெதற்கு
ஒற்றுமை ?

எல்லையைக் காக்கும் படை
வீரர்களுக்கு வணக்கம் வைத்து
உவப்புடன் வணங்குகிறேன், இந்தியக்
குடியரசை, எங்கள் பேரரசை !





3 கருத்துகள்:

  1. // வேற்றுமையே இல்லையே பிறகெதற்கு ஒற்றுமை ? // - அதானே...!?!

    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    பதிலளிநீக்கு