செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நானும் நீ, நான் வணங்கும் நாதனும் நீ

கருவும் நீ
கருவுக்குள் இருக்கும் உயிரும் நீ
பொருளும் நீ
பொருளைக் கொணரும் அருளும் நீ
வலியும் நீ
வலியைக் வதைக்கும் வழியும் நீ
திசையும் நீ
திசை எங்கிருக்கும் திரையும் நீ
கதிரும் நீ
கதிரை உமிழும் கனலியும்  நீ

எழுத்தும் நீ
எழுத்தாய் உதித்த சொல்லும்  நீ
சொல்லும்  நீ
சொல்லைக் கோர்த்த வரியும் நீ
வரியும் நீ
வரி உணர்த்தும் பொருளும் நீ
பொருளும் நீ
பொருளாய் மணக்கும் தமிழும் நீ

கந்தா
கவியும் நீ
கவி செதுக்கிய கவியும் நீ
நானும் நீ
நான் வணங்கும் நாதனும் நீ ...








2 கருத்துகள்: