புதன், 26 பிப்ரவரி, 2014

மகா சிவராத்திரி

ஆதி அறியா
அந்தம் இல்லா
ஆதிபகவா  !

ஆணும் பெண்ணும்
அவரவரின் அரையென்றுணர்த்தும்
அர்த்தநாதீஸ்வரா  !

வினையறுத்து குறைதீர்க்கும்
விடத்திற்கு மறியா
வைகல்நாதா !

காலத்தை வென்று
காலத்தைக் கடந்த
காலபைரவா !

குழகனின்  கனலே
கருணைக் கடலே
காலகாலா !

விநாயகனின் வித்தே
வேண்டுபவரின் சொத்தே
வில்வவனநாதா !

பிரணவப் பொருளே
பிரபஞ்ச முதலே
பிறைசூடா  !

அன்பின் உருவே
அரு உருவே
அடல்விடைப்பாகா !

மனதின் உள்ளே
மங்காது உணரும்
முக்கண்ணா !

அடியனின் தெரிவே
கண்ணின் சுடரே
எழுத்தின் தெளிவே
சொல்லின் சுவையே
செந்தமிழில் சொல்லெடுத்து
பைந்தமிழில் பாட்டெழுதி
சற்பிரசாதம் வேண்டி
சமைத்தேனே கவி !





2 கருத்துகள்: