ஆதி அறியா
அந்தம் இல்லா
ஆதிபகவா !
ஆணும் பெண்ணும்
அவரவரின் அரையென்றுணர்த்தும்
அர்த்தநாதீஸ்வரா !
வினையறுத்து குறைதீர்க்கும்
விடத்திற்கு மறியா
வைகல்நாதா !
காலத்தை வென்று
காலத்தைக் கடந்த
காலபைரவா !
குழகனின் கனலே
கருணைக் கடலே
காலகாலா !
விநாயகனின் வித்தே
வேண்டுபவரின் சொத்தே
வில்வவனநாதா !
பிரணவப் பொருளே
பிரபஞ்ச முதலே
பிறைசூடா !
அன்பின் உருவே
அரு உருவே
அடல்விடைப்பாகா !
மனதின் உள்ளே
மங்காது உணரும்
முக்கண்ணா !
அடியனின் தெரிவே
கண்ணின் சுடரே
எழுத்தின் தெளிவே
சொல்லின் சுவையே
செந்தமிழில் சொல்லெடுத்து
பைந்தமிழில் பாட்டெழுதி
சற்பிரசாதம் வேண்டி
சமைத்தேனே கவி !
அந்தம் இல்லா
ஆதிபகவா !
ஆணும் பெண்ணும்
அவரவரின் அரையென்றுணர்த்தும்
அர்த்தநாதீஸ்வரா !
வினையறுத்து குறைதீர்க்கும்
விடத்திற்கு மறியா
வைகல்நாதா !
காலத்தை வென்று
காலத்தைக் கடந்த
காலபைரவா !
குழகனின் கனலே
கருணைக் கடலே
காலகாலா !
விநாயகனின் வித்தே
வேண்டுபவரின் சொத்தே
வில்வவனநாதா !
பிரணவப் பொருளே
பிரபஞ்ச முதலே
பிறைசூடா !
அன்பின் உருவே
அரு உருவே
அடல்விடைப்பாகா !
மனதின் உள்ளே
மங்காது உணரும்
முக்கண்ணா !
அடியனின் தெரிவே
கண்ணின் சுடரே
எழுத்தின் தெளிவே
சொல்லின் சுவையே
செந்தமிழில் சொல்லெடுத்து
பைந்தமிழில் பாட்டெழுதி
சற்பிரசாதம் வேண்டி
சமைத்தேனே கவி !
சிறப்பான ஆக்கம்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி !
நீக்கு