செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ரத சப்தமி

ரட்சிக்கும் உலக மித்திரா
ரதத்தினில் வலம் வந்து
தினம் ஜகத்திற்கு உயிரூட்டுவாயே

தாமரையை ஒளிரச் செய்யும்
வெயிலோடு,  துவண்ட என்
நெஞ்சையும் மலரச் செய்வாயே

பகையும் தீயும் என்னை
படராமல் அணுகாமல்,பகலவனே
தினம் பனியாய் உருக்குவாயே

உலகம் மகிழ்வுற மழையைப்
பொழிந்து, அன்பு துளிர்விட
பண்பெண்ணும் விதையினை விதைப்பாயே

ஏழு வர்ண குதிரையேறி
எம் வாழ்வில் வர்ணமடிக்கும்
கதிரவா, வணங்குகிறேன் உன்னை
எந்நாளும் பொன்னாளாய் மலர்ந்ததுக்கு !









1 கருத்து: