வியாழன், 10 அக்டோபர், 2013

துளிர் மனமே !

புயலைக் கண்டு
மரம் பதுங்குவதில்லை
தடுத்துத் தலைநிமிர்கிறது ....
இடியைக் கண்டு
பூமி நடுங்குவதில்லை
தாங்கித் தழைக்கிறது .....
அங்ஙனமே தடையைக்
கண்டு தளர்ந்து
விடாதே மனமே
தாண்டித் துளிர் !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக