வெள்ளி, 7 மார்ச், 2014

பெண்மை

தாயாய் தாரமாய்
தினம் மகிழ்விக்கும்
தங்கக் குழந்தையாய்

தோழியாய் காதலியாய்
துன்பத்தில் துவழும்போது
தோள்சாயும் தோகையாய்

குறும்பான குழந்தையாய்
வீரமான வஞ்சியாய்
கோபம்கொண்ட குமரியாய்
பேதைப் பெண்ணாய்
அன்பான அன்னையாய்
அரவணைக்கும் அத்தையாய்
பழங்கதை பேசி
பண்பாளராக்கும்  பாட்டியாய்
திக்கெங்கும் நிறைந்திருந்தும்
திகட்டாத பெண்மைக்கு
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !





1 கருத்து: