வியாழன், 20 மார்ச், 2014

கோட்டை விட்ட கதைகள்

தூரத்தில் உன்னை
கண்டவுடன் பாய்ந்து
பேச துடிக்கும்
என் மனது

அன்னியமாய் பதுங்குகிறதே
அமைதியாய், அருகில்
உனை கண்டவுடன்

முட்டாள் மனது
மறந்தது போலும்
தான் பாயாமல்
பதுங்கி கோட்டை
விட்ட கதைகளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக