சனி, 10 மே, 2014

அன்னைக்கு வணக்கம் !

பள்ளிக்கு போற பய
பொதி சுமந்து போறான்னு
பச்சரிசி சாதத்த பதமா செஞ்சவளே

மேற்பள்ளிக்கு போற பய
மேம்பட்டுப் மேன்நிலை அடைய
மேற்கொண்டு கடன முதுகுல சுமந்தவளே

காலேஜ்க்கு போற பய
கண் கலங்க கூடாதுன்னு
கண்ணில நீர திறபோட்டு  மறச்சவளே

அமெரிக்காவுக்கு போற பய
அவனிக்கே தலைவனாகப்  போறான்னு
ஆர்ப்பரித்து வானை தொட்டு திரும்பினவளே

நினைக்காத நாளில்லை மறந்த
பொழுதில்லை இயற்றினேனே என்
கவிதை நீ கொடுத்த தமிழினிலே

எட்டினேன் உயரத்தை
முட்டினேன் வானத்தை
படைத்த கவிதையை
மழையென பொழியவே !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக