வகையாய் மாறுகின்றது
வாழ்வின் கண்ணோட்டம்.
பம்பரமாய் சுழலாமல்,
அவசரமாய் பறக்காமல்,
இயந்திரத்தில் மூழ்காமல்,
சில நேரங்களில்
கண்ட
சில மனிதர்களாலும்,
சில நாட்களில்
உணர்ந்த
சில நிகழ்வுகளாலும்.
திசை திருப்பின
வாழ்வின் மீதுள்ள
பயத்தை நன்றியாக
நடுக்கத்தை நெகிழ்ச்சியாக
ஏக்கத்தை ஏகாந்தமாக.
வேண்டுதல் நிறைவேற்றுவது
இறைவனோ இயற்கையோ
தலைவிதியோ தற்செயலோ
இக்கண வேண்டுதல் ஒன்றே!
பயத்தை பொசுக்கி
நடுக்கத்தை நசுக்கி
நன்றியை பெருக்கி
நெகிழ்ச்சியை நிலைநிறுத்துக!
வாழ்வின் கண்ணோட்டம்.
பம்பரமாய் சுழலாமல்,
அவசரமாய் பறக்காமல்,
இயந்திரத்தில் மூழ்காமல்,
சில நேரங்களில்
கண்ட
சில மனிதர்களாலும்,
சில நாட்களில்
உணர்ந்த
சில நிகழ்வுகளாலும்.
திசை திருப்பின
வாழ்வின் மீதுள்ள
பயத்தை நன்றியாக
நடுக்கத்தை நெகிழ்ச்சியாக
ஏக்கத்தை ஏகாந்தமாக.
வேண்டுதல் நிறைவேற்றுவது
இறைவனோ இயற்கையோ
தலைவிதியோ தற்செயலோ
இக்கண வேண்டுதல் ஒன்றே!
பயத்தை பொசுக்கி
நடுக்கத்தை நசுக்கி
நன்றியை பெருக்கி
நெகிழ்ச்சியை நிலைநிறுத்துக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக