சனி, 7 டிசம்பர், 2013

முத்தமிழ் சுடர் !

சுடராய் உதித்தவன், முத்தமிழின் முதல்வனவன்
நீல வானில் நீக்கமற நிறைத்தவன்
நெய்தலில் வினையறுத்து, குறிஞ்சியில் அமர்ந்தவன்
காற்றின் வேகத்தில் கஷ்டங்களைக் களைபவன்
வற்றாமல் அருளும் சுனையவன், துணையவன் .






ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மறதி

இன்றே சேமிக்கிறோம்
நாளைய வீட்டிற்கு
இன்றே வருந்துகிறோம்
நாளைய வாழ்வுக்கு
இன்றே கணக்கிடுகிறோம்
நாளைய வரவிற்கு
இன்றே முடிவெடுக்கிறோம்
நாளைய பிரச்சனைக்கு
கண்ணிமைக்கும் நேரத்தில்
காட்சிகள் மாறும்
என்பதை மறந்து ...






திங்கள், 25 நவம்பர், 2013

நம்பிக்கை

சாலையில் முன்
செல்லும் வாகனத்தை
நம்பி பயணிக்றோம்
நம்ப மறக்கிறோம்
வாழ்க்கையில் கூடவே
வரும் நம்பிக்கையை !

சனி, 23 நவம்பர், 2013

குழந்தை வேலன் !


கொஞ்சத் தூண்டும் குழந்தை வேலா  

மனதைத் திருடும் கள்வனே கந்தா
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரா
கருணையின் வடிவே அழகனே கதிரேசா ..


மனதைத் திருடும் கள்வன் உனை
கையில் ஏந்திக் கொஞ்சவும் தோனுதே
கணநேரமும் அகலாதே, கருத்தினில் மறையாதே 
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரனே ..



புதன், 20 நவம்பர், 2013

புறம்போக்கு

பயிர் இல்லா 
நிலம் மட்டும் 
புறம்போக்கு அல்ல 
யாருக்கும் உதவா 
நற்  குணமில்லா 
மனித மனமும்தான் ...

திங்கள், 18 நவம்பர், 2013

பயம்

பயம்
நடுங்க வைக்கும்
பயத்தை
நடுங்க வைக்காவிடில் !

வியாழன், 14 நவம்பர், 2013

சச்சினே, கிரிக்கெட்டின் பிதாமகனே !


சச்சினே, கிரிக்கெட்டின் பிதாமகனே
சாதனைகளின் நாயகனே , நீ
மைதானத்தில் இறங்கினால் மெய்மறந்தோம்
உன் கவர்-டிரைவில் கவிழ்ந்தோம்
சிக்ஸ் அடித்தால் சிலிர்த்தோம்
நூறைக் கண்டு நடனமாடினோம்
ஓய்வை அறிவித்தாய் ஓய்ந்தேபோனோம்
சரித்திரத்திலும்  எங்கள் மனதிலும்
நீங்கா வடு செய்த
சகாப்தத்தின் தொடக்கமே முடிவுற்றதே !



ஞாயிறு, 10 நவம்பர், 2013

அறிவியல் முன்னேற்றம்

கடிதத்திற்கு பதில்
தொலைபேசி மட்டுமல்ல
நிலவுக்கு பதில்
வானுர்தி சுட்டி
சோற்றுக்கு பதில்
பிட்சா ஊட்டுவதும்
அறிவியல் முன்னேற்றமே !


வெள்ளி, 8 நவம்பர், 2013

வேலவா

நிறையை  நிறைத்து 
குறையைக் குறைத்து
அறிவை புகற்றி 
இருளை அகற்றி
 பொருளை அளித்து 
வறுமையை ஒழித்து 
அகத்தில் நல்ல 
பிரணவத்தை நிறுத்தி
பேரின்பத்தை ஊட்டி 
மாயையை ஓட்டி 
வாழ்வை வளமாக்கி 
வாழ்வளித்தவனே  வேலவா !


வெள்ளி, 1 நவம்பர், 2013

தீப ஒளித் திருநாள் !

பொல்லாமை வன்கொடுமை
அசுரர்கள்  வதமாகி
செல்வ ஞான
ஒளி பெருகி
இல்லாமை அறியாமை
இருள் நீங்கி
மக்கள் இனிதே
மகிழ்வோடு வாழ
தீப ஒளித்
திருநாள் நல்வாழ்த்துக்கள் !