முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜனவரி, 2014

வேலின் வேந்தனே !

பூக்களை அடையா  தேனீ இல்லை 
காற்றைத் தேடா குழல் இல்லை 
கடலைச் சேரா ஆறு இல்லை 
நிலவை நேசிக்கா புலவனும் இல்லை 

வேலின் வேந்தனே, பராசக்தியின் புதல்வனே  
நீ இல்லாமல் நான் இல்லை
உன்னை நினையாத நாளும் இல்லை 
உன்னருளுக்கு நிகர் வேறு பொருளுமில்லை  
உன் அன்பில்லாமல் என் வாழ்க்கையுமில்லை ! 



சனி, 23 நவம்பர், 2013

குழந்தை வேலன் !


கொஞ்சத் தூண்டும் குழந்தை வேலா  

மனதைத் திருடும் கள்வனே கந்தா
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரா
கருணையின் வடிவே அழகனே கதிரேசா ..


மனதைத் திருடும் கள்வன் உனை
கையில் ஏந்திக் கொஞ்சவும் தோனுதே
கணநேரமும் அகலாதே, கருத்தினில் மறையாதே 
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரனே ..