செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

சகலகலாவல்லி





களையெடுத்து எந்தன் மனதில்
கலையை விதைத்த கலைவாணியே

பேதைமை எரித்து எனக்குப்
பாதை வகுத்த பாமகளே

நல்லதோர் வினை செய்ய
நாவன்மை அளித்த நாமகளே

உன்னருள் பெற்ற பெருவெள்ளத்தில்
என்னையும் சிறுதுளியாய் சேர்த்ததற்கு
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
வெள்ளைத் தாமரையில் வீற்று 
வெள்ளைப் பட்டுடுத்தி வரமளிக்கும் 
சரஸ்வதி தேவியே,சகலகலாவல்லியே 

1 கருத்து: