களையெடுத்து எந்தன் மனதில்
கலையை விதைத்த கலைவாணியே
பேதைமை எரித்து எனக்குப்
பாதை வகுத்த பாமகளே
நல்லதோர் வினை செய்ய
நாவன்மை அளித்த நாமகளே
உன்னருள் பெற்ற பெருவெள்ளத்தில்
என்னையும் சிறுதுளியாய் சேர்த்ததற்கு
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
வெள்ளைத் தாமரையில் வீற்று
வெள்ளைப் பட்டுடுத்தி வரமளிக்கும்
சரஸ்வதி தேவியே,சகலகலாவல்லியே
வரிகள் சிறப்பு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...